Saturday, November 14, 2009

கடத்தல்!

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள அத்திபள்ளி செக்போஸ்ட். இரு மாநிலங்களையும் பாரபட்சமின்றி ஆசிர்வதித்துக் கொண்டிருந்தது மழை. மாரத்தான் ரேஸ் ஆடும் மழைக்கு இதமாக டீ குடித்துக் கொண்டிருந்தார் இமானுல்லா. 10 ஆண்டுகளாக இந்த செக்போஸ்ட்டில் தான் வேலை. வரும், போகும் வண்டிகளில் கடத்தல் பொருட்கள் இருப்பதை டிரைவர்களின் கண்களை வைத்தே கண்டுபிடிக்கும் நேர்மையான கில்லாடி போலீஸ்காரர். தீவிரவாத நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறை எச்சரித்ததால், இமானுல்லாவுக்கு அன்று டபுள் டியூட்டி.

உக்காந்த எடத்துலயே உலகம் பூரா ஹைடெக் பொருளாதார தீவிரவாத்தை அழகா பண்றான் அமெரிக்காகாரன். அந்த மாதிரி எதாவது பண்ணி தொலையக்கூடாதா இந்த தீவிரவாதிங்க.. இப்படி அவனுங்களும் ஓடி ஒளிஞ்சி, நம்மளையும் நிம்மதியா விடமாட்றானுங்க" புலம்பலை முனகலாக்கிக் கொண்டிருந்தார் இமானுல்லா.

தூரத்தில் மிக வேகமாக ஒரு பைக். லெதர் கோட், ஹெல்மெட் போட்டு முழுவதுமாக தன்னை மறைத்துக் கொண்டு வருகிறான் ஒருவன். அவனை மடக்கினார். "சொல்லுங்க சார், எதுக்கு நிறுத்துனீங்க?"

"ம்ம்..உனக்கு மாலை போட்டு மரியாதை பண்ணத்தான். இறங்குய்யா வண்டிய விட்டு. சைடுல என்னய்யா அது?"

"மணல் பை சார். பாக்ஸிங் பிராக்டிஸ் பண்ண கொண்டு போறேன்"

"மணல் பை மாதிரி தெரியலயே.. அத பிரிச்சி கொட்டு"

"இல்ல சார்..அது வந்து..."

"இப்ப நீ பிரிக்கல...உன்ன நான் பிரிச்சிருவேன்"

பை முழுவதும் வெறும் மணல், வெறொன்றுமில்லை. ஆனால் அந்தப் பையில் ஏதோ ஒன்று கடத்தப்படுவதாக அவரது போலீஸ் மூளை சைரன் அடித்தது. ஆனாலும் அவருக்குத் தெரிந்த நுட்பங்களைக் கொண்டு சோதித்தார். முடியவில்லை. அரை மனதாக அவனை அனுப்பினார்.
ஒரு வாரம் கழிந்தது. அதே ஆள். ஆனால் இம்முறை பைக்கில் நான்கு பைகளைக் கட்டியிருந்தான். நான்கும் பெரிய, வித்தியாசமான வடிவத்தில் அழகாக இருந்தன.

"நிறுத்து, நிறுத்து.. போன வாரம் வந்தவன் தானே நீ...இந்த முறை என்ன கொண்டு போற? எல்லாத்தையும் பிரி"

இம்முறை மிகுந்த தயக்கத்துடன் பிரித்தான். பெரிய பைகள் முழுவதும் மிகச் சிறிய கூழாங்கற்கள், அதனுடன் சிறிய தர்மாக்கோல் பந்துகள். அவற்றை அக்குவேறு ஆணி வேறாக சோதித்து விட்டார் இமானுல்லா. கூட இருந்த இரண்டு போலீஸ்காரர்களும் சோதனையில் களைத்து விட்டனர்.

வெற்றிக் களிப்புடன் அத்தனை மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ஆனாலும் அந்த மூட்டையில் என்னமோ இருப்பதாக இமானுல்லாவின் உள்மனது அலறியது.
"சே.. இத்தனை வருஷம் போலீஸா இருந்ததுக்கே வெக்கப்படுறேன். அவன் அந்தப் மூட்டைக்குள்ள என்னமோ கடத்துறான். ஆனா கண்டுபுடிக்க முடியல. விஞ்ஞானம் கடத்தலுக்கு நல்லாவே உதவுது" என வெளிப்படையாக புலம்பினார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 8 முறை அவன் அந்த செக்போஸ்ட்டை அழகாக கடந்தான், பைக்கில் வித விதமான மணல், தெர்மாகோல், மரத்தூள் மூட்டைகளுடன். இமானுல்லாவும் சளைக்காமல் அவனை சோதனை செய்தார். ஒன்றும் நடக்கவில்லை.

மிகப் பெரிய ஏமாற்றத்துடன் பணி ஓய்வு பெற்றார் இமானுல்லா. எல்லைப் புற கிராமத்தில் உள்ள வீட்டில் பொழுதைக் கழித்த அவர், ஒருநாள் நெடுஞ்சாலையில் உள்ள கணேசன் டீ கடையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

"ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுப்பா...!" கணீரென ஒலித்த குரலைக் கேட்டு பேப்பரிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்த்தார் இமானுல்லா.

அதே முகம்...அதே குரல்...அவனே தான்!

"யோவ்... என்னய்யா இந்த பக்கம். எங்க கடத்தல் மூட்டைகளைக் காணோம்"

"வணக்கம் சார். ரிட்டயர்டு ஆயிட்டீங்களா...பரவால்ல, என்ன ஞாபகம் வச்சிருக்கீங்க!

இப்பல்லாம் யாரும் உங்கள மாதிரி நேர்மையா சோதனை பண்றதில்லை சார். காசு வாங்கிட்டு விட்டுர்றாங்க"

"எனக்கே தண்ணி காட்டுன கில்லாடிய்யா நீ, மறக்க முடியுமா...சரி, இப்போ எனக்கு ஒரு உண்மையைச் சொல்லு...மணல் மூட்டைங்கற பேர்ல தமிழ்நாட்டுல இருந்து கர்நாடகாவுக்கு என்னத்த கடத்துன? சத்தியமா நா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்!"

"வேணாம் விடுங்க சார்!"

"நான் ரிட்டயர்டு ஆயிட்டேன். உனக்கு எந்த பிரச்சனையும் வராது. நீ கடத்துறன்னு நிச்சயமா தெரியும். ப்ளீஸ், இத்தனை வருஷமா என்ன கடத்துன?"

"திருட்டு பைக்!"


எனக்கு எஸ்.எம்.எஸ் மூலம் வந்த ஆங்கிலத்தில் ஜோக். கதையாக்கி இருக்கிறேன்.
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்கவில்லையென்றாலும் பின்னூட்டமிடுங்கள்!!

Sunday, November 8, 2009

மற்றொரு மூலையில்...அடச்சே!!


போன மாதம் கண்புரைக்கு சிகிச்சை செய்ததால், வெளிச்சத்தைத் தவிர்க்க கறுப்புக் கண்ணாடியுடன் அந்த பூங்காவுக்குச் சென்றார் நடேசன். தினமும் இதே நேரம் வாக்கிங் போனாலும், யாருடனும் இதுவரை பேசியதில்லை.சில நாட்களாக தன் வயதை ஒத்த மூன்று பேரிடம் ஹலோ மட்டும் சொல்வதுண்டு. அவர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள். நால்வருக்கும் பொதுவான நண்பன் ஹலோ மட்டுமே...

"இன்னைக்காவது அவங்ககிட்ட பேசிடணும்..." என்று யோசித்துக் கொண்டே உள்ளே சென்றார். பூங்காவின் மற்றொரு மூலையில் அந்த மூன்று பேரும் கைகுலுக்கிக் கொண்டிருந்தனர். மெதுவாக அவர்களை நோக்கிச் சென்றார்.

பூங்காவின் மற்றொரு மூலையில்...
"இத்தனை நாளா நாம வெறுமனே ஹலோ மட்டும் தான் சொல்லிக்கிட்டிருந்தோம். இன்னைக்குத் தான் பேசறோம். ரொம்ப சந்தோஷம். என் பேரு சுந்தரராஜன். ரிட்டயர்டு கவர்மெண்ட் ஸ்டாப். என் மகன் சாதாரண கார் சேல்ஸ்மெனா இருந்தான். இன்னைக்கு உழைச்சு முன்னேறி பெரிய கார் ஷோரூம் வச்சிருக்கான். தன்னோட பிரெண்டுக்கு ஒரு சான்ட்ரோ கார் பிரசன்ட் பண்ணிருக்கான். நட்புக்கு இலக்கணம் அவன்" என்றார் ஒருவர்.

"என் பெயர் அருளப்பன். என் பையனும் சும்மா இல்ல. கார்பென்டரா இருந்தான். படிப்படியா முன்னேறி இன்னைக்கு பெரியளவுல ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றான். தன்னோட பிரெண்டுக்கு தாம்பரத்துல பிளாட் பிரசன்ட் பண்ணி அசத்திட்டான். என் மகன் தான் நல்ல நட்புக்கு உதாரணம்..." இது இரண்டாமவர்.

"நான் மனோகரன். என் பையன் ஷேர் மார்க்கெட் புலி. சமீபத்துல தன்னோட நண்பனுக்காக லாபத்துல இருக்குற கம்பெனியோட 1 லட்ச ரூபா ஷேர்ஸ் சும்மாவே கொடுத்துருக்கான். நட்புக்காக எதையும் செய்வான் என் மகன்" என்றார் மூன்றாமவர்.

இவர் பேசி முடிக்க, நடேசன் அங்கு வந்து சேர்ந்தார்.

"வாங்க சார். நீங்க கொஞ்சம் லேட். நாங்க மூணு பேரும் அறிமுகமாயிட்டோம். உங்களையும் உங்க குடும்பத்தைப் பத்தியும் சொல்லி அறிமுகப்படுத்திக்கோங்க! அப்புறம் நாங்க எங்கள பத்தி சொல்றோம்"

"வணங்கம்க...என் பேரு நடேசன். எனக்கு பொய் பேச வராது. நான் ரிட்டயர்டு ஸ்கூல் டீச்சர். எனக்கு ஒரே ஒரு மகன். உருப்படியா எந்த வேலையிலும் நிலைக்கறதில்லை. சமீபத்துல தான் அவன் ஒரு ஹோமோன்னு கண்டுபுடிச்சேன். அவனுக்கு 'பாய் பிரெண்ட்ஸ்' அதிகம். அதுல ஒரு கார் கம்பெனிகாரன் சாண்ட்ரோ கார் கொடுத்துருக்கான், ரியல் எஸ்டேட்காரன் தாம்பரத்துல பிளாட் கொடுத்துருக்கான், ஷேர் பிசினஸ் பண்ற ஒருத்தன் 1 லட்ச ரூபா ஷேர்ஸ் அன்பளிப்பா கொடுத்துருக்கான். என்ன கருமத்துக்குத்தான் இவனுங்கள்லாம் இப்படி அலையறானுங்கன்னு தெரியல...சரி உங்களையும், உங்க பசங்கள பத்தியும் சொல்லுங்க!

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க...இதெல்லாம் ஒரு கதைன்னு எங்க நேரத்தை கெடுத்தியேன்னு நினைக்கிறவங்க கருத்துரைல திட்டலாம்!